முன்னாள் பிரதமர்கள் டி.எஸ் மற்றும் டட்சி சேனாநாயக்கவின் பெயர்களடங்கிய நினைவுப் படிகத்தை தூக்கி வீசிவிட்டு மைத்ரிபால சிறிசேனவின் பெயரடங்கிய புதிய படிகம் நிறுவப்பட்ட சம்பவம் இரணமடுவில் இடம்பெற்றுள்ளது.
1922 நிர்மாணிக்கப்பட்ட 1954ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டிருந்த இரணமடு தாங்கியின் அக்கால கட்டத்துக்குரிய நினைவுப்படிகமே இவ்வாறு மைத்ரிக்காக தூக்கி வீசப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர்களின் பெயர்களுடன் காணப்பட்ட குறித்த படிகம் விடுதலைப் புலிகளினாலும் உடைக்கப்படாத நிலையில் அண்மையில் 2130 மில்லியன் ரூபா செலவில் மீளவும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதின் திறப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டதன் நிமித்தமே பழைய படிகம் தூக்கி வீசப்பட்டு மைத்ரியின் பெயரில் புதிய படிகம் நிறுவப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது இது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் பழைய படிகமும் அப்பகுதியில் நிறுவப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Photo credit: ST
Photo credit: ST
No comments:
Post a Comment