நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில் சபைக்குள் பாரிய கலகங்களை விளைவித்து மிளகாய்த்தூள் தாக்குதல் மற்றும் தளபாடங்களை உடைத்தெறிந்த விடயங்கள் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் போலி ஒப்பத்துடன் போலி அறிக்கை வெளியிடப்பட்ட விவகாரமும் இதில் உள்ளடக்கம் எனவும் ஏலவே பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மீண்டும் கூட்டாட்சிக்குள் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில் 'தீர்க்கமான' நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுமா என்பது சந்தேகத்துக்குரியது என அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment