மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லையென்பதை ஏற்றுக்கொள்கின்ற போதிலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதிலேயே மைத்ரிபால சிறிசேன தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கிறார் மனோ கணேசன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்புகள் சுமுகமாவே இடம்பெற்றதாக இதுவரை தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றைய சந்திப்பு தொடர்பில் விவரித்துள்ள மனோ கணேசன், ரணிலை மீண்டும் பிரதமராக்குவது தொடர்பிலான பேச்சு எழுந்ததும் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுற்றதாக தெரிவிக்கிறார்.
எனினும், ரணில் விக்கிரமசிங்கவே பிரதமர் பதவிக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தெரிவென இன்ற எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment