வெறுப்பிலேயே பக்கம் தாவினேன்: விஜேமுனி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 December 2018

வெறுப்பிலேயே பக்கம் தாவினேன்: விஜேமுனி!


மஹிந்த ராஜபக்சவுக்கும் மைத்ரிபால சிறிசேனவுக்கும் மரியாதை உள்ள போதிலும் அவர்களைச் சுற்றியுள்ள இடையில் வந்த தண்டல்காரர்களோடு இனியும் பணியாற்ற முடியாது என்பதாலேயே தான் பக்கம் தாவியதாக தெரிவிக்கிறார் விஜேமுனி சொய்சா.


அண்மையில் இடம்பெற்ற அரசியல் சூழ்ச்சி தம்மை வெகுவாகப் பாதித்ததாகவும் தெரிவித்த அவர், 1979 முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காகப் பாடுபட்டு வந்த தாம் தற்போது இணைந்துள்ளவர்களின் நடவடிக்கைகளால் அதிருப்தியுற்றுள்ளதாக விளக்கியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின் அப்பச்சியின் காலம் முடிவடைந்து விட்டது என தெரிவித்து பரபரப்பை உருவாக்கிய விஜேமுனி ஸ்திரமான அரசை உருவாக்கும் நிமித்தம் பக்கம் தாவியுள்ளதாகவும் விளக்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment