நீதிமன்றம் இன்று விதித்துள்ள இடைக்கால உத்தரவுக்கமைய தற்போது அரசாங்கம் ஒன்றில்லை என முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தான் அவ்வுத்தரவைப் பார்த்து விட்டு நாளை முடிவொன்றை எடுப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது என தெரிவித்துள்ள மைத்ரி, நாளை இது பற்றிப் பேசுவதாக தெரிவித்துள்ள அதேவேளை மஹிந்த ராஜபக்ச நாளை உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment