தீர்ப்பு பற்றி கவலையில்லை; தேர்தலுக்குத் தயாராகிறோம்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Saturday 8 December 2018

தீர்ப்பு பற்றி கவலையில்லை; தேர்தலுக்குத் தயாராகிறோம்: மஹிந்த


உச்ச நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்றுள்ள நிலையில் தாம் தீர்ப்பைப் பற்றி கவலைப்படாமல் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எனும் கட்சியூடாக மொட்டுச் சின்னத்திலேயே தமது தரப்பு தேர்தலை சந்திக்கப் போவதாக மஹிந்த அணி தெரிவித்து வருகிறது. இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்து போவதாகவும் அதனை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் பிறிதொரு தரப்பு இயங்கி வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இடைக்காலத் தடை தொடர்கின்றமையும் தாம் தீர்ப்பு பற்றி கவலையின்றி தேர்தலுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment