இலங்கை ஒரு ஜனநாயக சோசலிஷ குடியரசு. சர்வாதிகார நாடன்று. இந்நிலையில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றமே என தனது வாதத்தை முன் வைத்துள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்.
நாட்டின் அரசியல் சட்டம் என்பது பல புள்ளிகளின் கோர்வையெனவும் அதில் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்து, ததம் விரும்பிய வற்றை விரும்பிய வகையில் மொழி பெயர்க்க அனுமதிக்க முடியாது எனவும் சற்று முன்னர் அவரது வாதத்தின் போது தெரிவித்தார்.
பேராசிரியர் ஹுல் சார்பாக ஹிஜாஸ் இவ்வழக்கில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment