ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணி அரசொன்றே அமையவுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து அரசில் இணைந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் பின்னணியில் அமைச்சரவை நியமன பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் அவரோடு இணைந்து கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கூட்டாட்சியைத் தொடர ரணிலோடு இணைந்து கொள்ளவுள்ளமையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மீண்டும் கைச்சாத்திடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment