புதிய அமைச்சரவை நியமனம் பெற்ற பின் வெளிநாட்டுப் பயணங்கள் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியின் பின்னர் கட்சியின் இழந்திருந்த இடத்தை மீண்டும் பெற்றுள்ள சஜித் தற்போது முன்னரங்கிலிருந்து செயற்பட ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
2015 ஆட்சிபீடமேறிய போது அடுக்கடுக்காக பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியினர் மத்திய வங்கி மோசடியின் மூலம் தலைகுனிவை சந்தித்ததோடு அமைச்சு மட்டங்களிலும் ஊழல்கள் நடந்தேறி வந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment