மஹிந்த ராஜபக்சவும் மைத்ரிபால சிறிசேனவும் இனியும் பிரிய மாட்டார்கள் என உறுதிபட தெரிவிக்கிறார் டிலான் பெரேரா.
இருவருக்குமிடையில் கடந்த ஒன்றரை மாதங்களாக உருவாகியிருக்கும் புரிந்துணர்வு இன்னும் 15 வருடங்களுக்காவது நீடிக்கும் எனவும் அதற்கிடையில் அவர்கள் பிரிந்தால் தானும் அரசியலை விட்டு ஒதுங்கப் போவதாகவும் சவால் விடுத்துள்ளார் டிலான் பெரேரா.
மஹிந்த தன்னைக் கொன்று விடுவார் என தெரிவித்து பொது வேட்பாளராக வெற்றி பெற்ற மைத்ரிபால, கடந்த ஒக்டோபர் 26ம் திகதி அவரைப் பிரதமராக்கி ரணில் தரப்பினால் அச்சுறுத்தல் என தெரிவித்திருந்த அதேவேளை நாளைய தினம் ரணிலை பிரதமராக நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment