அவசரமாக ஜனாதிபதி செயலகம் சென்று திரும்பிய மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Monday 3 December 2018

அவசரமாக ஜனாதிபதி செயலகம் சென்று திரும்பிய மஹிந்த!



பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்ச தொடர்வதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவசரமாக ஜனாதிபதி செயலகம் சென்று திரும்பியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.



நீதிமன்ற தடையுத்தரவினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவிக்கின்ற அவர், அதற்கெதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், இன்றைய தடையுத்தரவையடுத்து நாட்டில் தற்போது அரசாங்கம் ஒன்றில்லையென மைத்ரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளமையும் இந்நிலையில் நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment