உச்ச நீதிமன்றமே இறுதித் தீர்ப்பளிக்க முடியும்: மஹிந்த! - sonakar.com

Post Top Ad

Monday 3 December 2018

உச்ச நீதிமன்றமே இறுதித் தீர்ப்பளிக்க முடியும்: மஹிந்த!


மேன்முறையீட்டு நீதிமன்றம் இற்று விதித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவை எதிர்த்து நாளைய தினம் உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப் போவதாக தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ச, உச்ச நீதிமன்றமே இறுதித் தீர்ப்பளிக்க முடியும் என தெரிவிக்கிறார்.



நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டவே பாடுபடுவதாக அவர் தெரிவித்துள்ள அதேவேளை சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாகக் கூறி அவரது பிரதமர் பதவியும் அமைச்சு பதவிகளும் தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, உச்ச நீதிமன்ற தீர்ப்பே இறுதியானது எனவும் தாம் நாளை மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும் மஹிந்த தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment