ஜனாதிபதி சட்டத்தை மதிப்பார் என எதிர்பார்க்கிறோம்: ரணில் - sonakar.com

Post Top Ad

Thursday 13 December 2018

ஜனாதிபதி சட்டத்தை மதிப்பார் என எதிர்பார்க்கிறோம்: ரணில்


உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி இனி வரும் காலத்தில் சட்டத்தை மதித்து செயற்படுவார் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.



நீதித்துறை, அரசியலமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என அனைத்துமே ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்கள் என தெரிவித்துள்ள அவர், நாட்டின் இறையான்மையைக் காப்பாற்றும் வகையில் ஜனாதிபதி நடந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்.

நாடாளுமன்றைக் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு 19ம் திருத்தச் சட்டத்துக்கமைவாக சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment