7 - 0 : நாட்டின் ஜனாதிபதிக்குத் தலைகுனிவு! - sonakar.com

Post Top Ad

Thursday 13 December 2018

7 - 0 : நாட்டின் ஜனாதிபதிக்குத் தலைகுனிவு!


தான் விளங்கி வைத்திருந்த நிறைவேற்று அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தி நாடாளுமன்றைக் கலைத்து மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட முற்பட்டு தலை குனிவை சந்தித்துள்ளார் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



கடந்த நவம்பர் 9ம் திகதி நாடாளுமன்றைக் கலைக்க அவர் மேற்கொண்ட உத்தரவு அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது எனவும் சட்டவிரோதம் எனவும் ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு நீண்ட விசாரணையின் பின் இன்று  ஏகமானதாக தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், 19ம் திருத்தச் சட்டத்தை மைத்ரி தவறாகவே விளங்கி வைத்திருப்பதுடன் பிரதமர் நீக்கம் உட்பட சகல விடயங்களையும் தற்போது மீளாய்வுக்குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment