
ஜனவரி 5ம் திகதி தேர்தலை நடாத்தும் வரை இடைக்கால அரசுக்கே தான் பிரதமரானதாகவும் அதையும் விட்டு விலகுவதாகவும் தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
சட்டவிரோதமாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தையும் சட்டவிரோதமாக கலைக்க முயன்று தற்போது நீதிமன்ற தலையீட்டில் நாடாளுமன்ற கலைப்பு தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பதவி தற்காலிகமானது எனவும், தேர்தலை நடாத்துவதே நோக்கமாக இருந்தது எனவும் அதனை நடாத்த முடியாத நிலையில் தான் அப்பதவியில் இருப்பதில் பயனில்லையெனவும் அறிக்கை விட்டு தனது 'விலகலை' உறுதி செய்துள்ளார் மஹிந்த.
No comments:
Post a Comment