அரசியலுக்கு அப்பால் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு தனது வாழ்த்தினைத் தெரிவிப்பதாக ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார் நாமல் ராஜபக்ச.
இனியாவது, மேற்குலக நாடுகளின் அபிலாசைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது நாட்டின் பிரச்சினைகளை முற்படுத்தி ரணில் பணி புரிவார் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் 50 நாள் அரசியல் சூழ்ச்சி தோல்வியில் முடிந்த நிலையில் தாம் அமெரிக்க, ஐக்கிய இராச்சிய உளவு நிறுவனங்களுடன் போட்டியிட்டே தோற்றிருப்பதாக உதய கம்மன்பில தெரிவித்திருந்தமையும் ரணில் விக்கிரமசிங்க மேற்குலகு சார்ந்தும் மஹிந்த ராஜபக்ச சீனா சார்ந்தும் செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment