நீதிமன்றுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் அமைச்சு செயலாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Monday 3 December 2018

நீதிமன்றுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் அமைச்சு செயலாளர்கள்!


நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நாளைய தினம் உச்ச நீதிமன்றில் ஆரம்பமாகவுள்ள நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் நாளைய தினம் அங்கு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறக் கூடும் எனவும் இப்பின்னணியில் நீதிமன்றங்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் அமைச்சு செயலாளர் சங்கம் பொலிசில் முறையிட்டுள்ளது.



இன்றைய தினம் மஹிந்த அரசுக்கு எதிராக இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க முடியாது என மைத்ரி நிராகரித்துள்ளார்.

இந்நிலையில், ஏழு பேர் கொண்ட நீதிபதிகள் குழு நாளைய தினம் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளமையும் 7ம் திகதியளவில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment