தற்சமயம் நாட்டில் அமைச்சரவையும் பிரதமரும் இல்லாததால் ஒக்டோபர் 26க்கு முன்னிருந்தது போன்று ரணில் தலைமையில் அமைச்சரவை இயங்கப் போகிறது என தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
மைத்ரிபாலவின் அதிரடி நடவடிக்கைகளினால் பாரிய அரசியல் சர்ச்சை உருவாகி இன்றைய தினம் மஹிந்த தலைமையிலான அமைச்சரவை இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்சமயம் நாட்டில் அரசொன்று இல்லையென்பதால் பழைய அமைச்சரவை இயங்க முடியும் என்கிறார் ராஜித.
இதேவேளை, புதன் கிழமைக்குள் மைத்ரி வழிக்கு வராவிட்டால் மக்கள் புரட்சி மூலம் அரசைக் கைப்பற்றப் போவதாக சம்பிக்க ரணவக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment