அக்குறணை பிரதேச சபையின் 2019 ம் ஆண்டுக்கான வரவு செலுவுத் திட்டம் இன்று 11 ம் திகதி மாலை எதிர்கட்சியினரின் சபை பகிஷ்கரிப்புக்கு மத்தியில் வாக்கெடுப்பின்றி நிறை வேற்றப்பட்டது.
இன்று மதியம் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே வரவு-செலவுத் திட்டம் சபைத் தலைவர் இஸ்திஹாரினால் முன் வைக்கப்பட்டிருந்த அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்திருந்தனர்.
எனினும், வாக்கெடுப்பு எதுவுமின்றி வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றப்படடதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-மொஹொமட் ஆஸிக்
No comments:
Post a Comment