நாளைய தினம் மீண்டும் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ள நிலையில் தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப் போவதாக தெரிவிக்கிறது மஹிந்த அணி.
நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாத நிலையில் தம்மை அரசாங்கம் என தெரிவித்துக் கொண்ட போதிலும் மஹிந்த அணி நாடாளுமன்ற நடவடிக்கையை புறக்கணித்து வந்தது. இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்காலத் தடை விதித்திருந்தது.
நாளைய தினம் மீண்டும் அவ்வழக்கும் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment