மஹிந்த ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்ட சட்டவிரோத பிரதமர் பதவியிலிருந்து நாளைய தினம் ஒதுங்கிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ச.
பிரதமராக இயங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்க மறுத்துள்ள நிலையில் நாட்டின் நலன் கருதி தந்தை ஒதுங்கிக் கொள்வதாக நாமல் அறிவித்துள்ளார்.
நாளைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு மஹிந்த தனது அறிவிப்பை வெளியிடுவார் என நாமல் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment