பிரதமர் மற்றும் அமைச்சர்களை நீதிமன்றம் தற்காலிகமாக பதவி நீக்கியிருப்பது உலகிலேயே இதுவே முதற்தடவையென தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
இவ்வாறான ஒரு சரித்திர நிகழ்வின் பின்னரும் பதவிகளுக்காக நாட்டைக் குழப்பாது மஹிந்த தரப்பு ஒதுங்க வேண்டும் எனவும் எவ்வாறாயினும் அமைச்சுகள் ஐக்கிய தேசியக் கட்சி வசம் வந்து விடும் எனவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரணில் இவ்வாரத்திற்குள் மீண்டும் பிரதமராகிவிடுவார் என ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment