நாடாளுமன்ற பெரும்பான்மையற்ற நிலையில் தொடர்ந்தும் இயங்கி வரும் மஹிந்த ராஜபக்சவுக்கும் அவரது அரசுக்கும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச எந்த அதிகாரத்தின் அடிப்படையில் பிரதமர் பதவி வகிக்கிறார் என்பதை விளக்குவதற்கான வாய்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் அது வரை அப்பதவியில் தொடர்வதற்கும் பெரும்பான்மைப் பலம் அற்ற அரசு இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தகுதியற்றவர்கள் பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவியில் இருப்பதானது நாட்டுக்கு பேராபத்தை உருவாக்கும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளமையும் 12ம் திகதி மீண்டும் விசாரணை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment