மஹிந்த ராஜபக்சவின் மேன்முறையீட்டை ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் முன் வைக்கப்பட்டிருந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தான் பிரதமர் பதவியில் தொழிற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து மஹிந்த மேன்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் மேன்முறையீட்டை ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு விசாரிக்க வேண்டும் என ஐ.தே.க மனுத் தாக்கல் செய்திருந்தது.
இப்பின்னணியில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவே இவ்வழக்கை விசாரிக்கவுள்ளது.
No comments:
Post a Comment