ரணில் விக்கிரமசிங்கவை ஒரு போதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லையென சவால் விடுத்திருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்து பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ள நிலையில் மைத்ரிபால சிறிசேன எப்போது பதவி விலகுவார் என சமூக வலைத்தளங்களில் பரந்த அளவு கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது.
ரணில் பதவிக்கு வந்தால் ஒரு மணி நேரம் கூட தான் பதவியிலிருக்கப் போவதிலலையென மைத்ரி தெரிவித்திருந்தமை பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் 50 நாள் போராட்டத்தின் பின் நீதிமன்ற தலையீட்டில் தற்போது அரசியல் சூழ்நிலை மாறியுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், மைத்ரி தனது வாக்குறுதிக்கமைய பதவி விலகுவாரா எனும் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment