மைத்ரிபால சிறிசேன தான் விரும்பிய நபரை பிரதமராக்கும் அதிகாரம் 19ம் திருத்தச் சட்டத்துக்குப் பின் அவருக்கு இல்லை ஆயினும் அவராக இராஜினாமா செய்வதற்கு முடியும் என தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
முன்னும் பின்னும் முரணாகப் பேசி வரும் மைத்ரிபால சிறிசேன, இராஜினாமா செய்வது பற்றியும் சிந்த்தித்ததாகவும் அவருக்கு சட்ட ஆலோசனை வழங்கும் தரப்பு அவரைத் தவறான வழியில் இட்டுச் செல்வதாகவும் தெரிவித்துள்ள ராஜித, பிரதமர் பதவியை யாருக்கும் தராது மைத்ரிபால வைத்துக் கொள்ள முடியாது, இதற்கு ஒரு தீர்வு வந்தேயாக வேண்டும் என தெரிவிக்கிறார்.
இந்நிலையில், நாளைய தினம் உச்ச நீதிமன்றம் ஜனாதிபதியின் நாடாளுமன்ற கலைப்பு அதிகாரம் தொடர்பிலான தீர்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment