இலங்கையின் அரசியல் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளமை குறித்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன் அமைதியான தீர்வை வரவேற்றுள்ளன.
அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் விளைவால் ஜனநாயக அடிப்படையில் தீர்வு கிடைத்திருப்பதாகவும் அதனை தாம் வரவேற்பதாகவும் ஐரோப்பிய யூனியன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவும் தீர்வை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment