மக்கள் அபிமானத்தை வென்று மீண்டும் புகழின் உச்சத்தை அடைந்திருந்த நிலையில் மஹிந்த ராஜபக்சவை சரித்து வீழ்த்தி விட்டார்கள் என தெரிவிக்கிறார் குமார வெல்கம.
மைத்ரி அணியிலிருந்து மஹிந்த அணிக்குத் தாவிய ஒரு சிலரே இதன் சூத்திரதாரிகள் என தெரிவிக்கின்ற அவர், மஹிந்த இன்று விலகிக் கொண்டது நல்லது எனவும் பலவந்தமாக பதவிகளைப் பிடித்து வைத்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
50 நாள் அரசியல் பரபரப்பின் போதும் நாடாளுமன்ற பெரும்பான்மையுள்ளவர்களிடமே அதிகாரம் இருக்க வேண்டும் என வெல்கம கருத்து வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment