மஹிந்த ராஜபக்ச பிரதமராக இயங்குவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ள போதிலும் அவரே ஒக்டோபர் 26ம் திகதி முதல் பிரதமர் என நாடாளுமன்ற இணையத்தில் தகவல் பதிவாகியிருந்தது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபனை வெளியிட்டிருந்த நிலையில் இன்று அது மாற்றம் செய்யப்பட்டு மஹிந்த ராஜபக்சவும் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினர் என பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு ஊடகங்களும் தொடர்ந்து மஹிந்தவை பிரதமர் என்று அழைத்து வருவதாக சபையில் முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment