இலங்கை முஸ்லிம்களின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பாதுகாப்பு நலன்களை கருத்திற்கொண்டும் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நிறுவங்கள் அனைத்தும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பூரண வழிகாட்டலின் கீழ் ஒரே அணியில் ஒன்று திரள வேண்டும் என்ற கோரிக்கையினை கிழக்கு இளைஞர் அமைப்பு முன்வைத்துள்ளது.
இது சம்பந்தமான ஆரம்ப கலந்துரையாடல் அண்மையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பொது செயலாளர் அஷ் - ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் (கபூரி) உதவி செயலாளர், மத்திய குழு உறுப்பினர் எம்.எச். யெஹியா (பலாஹி) ஆகியோரோடு கிழக்கு இளைஞர் அமைப்பு முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
-எம்.என்.எம்.அப்ராஸ்
No comments:
Post a Comment