ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது சட்டவிரோதம் என தம்பர அமில தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம் வழக்கைத் தொடர்வது குறித்த ஜனவரி 7ம் திகதி பரீசீலிப்பதாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கலைப்பு விவகாரத்தின் தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வழக்கின் தீர்ப்பு பல அரசியல் சர்ச்சைகளை கலையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றம் அரசியல் சட்டத்துக்கு வழங்கப் போகும் விளக்கத்தின் அடிப்படையில் தாம் செயற்பட காத்திருப்பதாக மைத்ரி தெரிவித்துள்ள நிலையில் நாடாளுமன்ற கலைப்பு தவறென தீர்ப்பளிக்கப்பட்டால் ஒக்டோபர் 26க்கு முந்தைய அரசு இயங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment