மஹிந்தவின் பிரதமர் பதவி: ஜனவரி 18 வரை தடை தொடரும்! - sonakar.com

Post Top Ad

Wednesday 12 December 2018

மஹிந்தவின் பிரதமர் பதவி: ஜனவரி 18 வரை தடை தொடரும்!


மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவி வகிப்பதற்கும் அவரது 49 பேர் கொண்ட அமைச்சரவை இயங்குவதற்கும் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ஜனவரி 18 வரை தொடரவுள்ளது.



இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஜனவரி 16,17 மற்றும் 18ம் திகதி வாதப்பிரதிவாதங்களை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை நிறைவுறும் வரை மஹிந்த மற்றும் அவரது அமைச்சரவை இயங்கத் தடை தொடரவுள்ளது.

122 நாடாளுமன்ற உறுப்பினர்களால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment