உச்ச நீதிமன்றின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில் 13ம் திகதி லட்சக் கணக்கில் மக்களைத் திரட்டி பேரணியொன்றை நடாத்த ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய தேசியக் கட்சி அத் திட்டத்தை 17ம் திகதிக்கு தள்ளி வைத்துள்ளதாக தெரிவிக்கிறது.
இவ்வாரம் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில் 13ம் திகதி பேரணியைத் தவிர்ப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழக்கு விசாரணை முடிவுற்றுள்ள நிலையில் ஏழு நீதிபதிகள் கொண்ட குழுவின் தீர்ப்புக்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment