மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை எதிர்த்து மஹிந்த தரப்பினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை மறுதினம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த பிரதமராக இயங்குவதற்கான தகுதியை விளக்கக் கோரி 122 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவருக்கு இடைக்கால தடை விதித்துள்ளதுடன் குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 16, 17 மற்றும் 18ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் அவரது தடையும் அது வரை தொடரவுள்ளது.
இந்நிலையிலேயே கடந்த வாரம் மஹிந்த தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீடு நாளை மறுதினம் விசாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment