ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறி விட்டதாக தெரிவிக்கிறார் வசந்த சேனாநாயக்க.
மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து கட்சி தாவியுள்ள வசந்த, அது தொடர்பில் இன்று விளக்கமளித்திருந்தார். இதன் போது, தான் பணத்துக்காக கட்சி மாறவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறியதால் ஜனாதிபதியின் வேண்டுகோளை மதித்து அவரது கரங்களைப் பலப்படுத்த முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தான் பணத்துக்காக கட்சி தாவவில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமையும் மஹிந்த தரப்பின் பேரம் பேசல்கள் தொடர்பில் ஒலிப்பதிவு வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment