மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்துக்கு ஏற்றுக்கொள்வதற்கு எந்த அவசரமும் இல்லையென தெரிவிக்கிறார் ஜி.எல். பீரிஸ்.
நாடாளுமன்றம் 14ம் திகதி கூடியதும் அதற்கான ஒழுங்கில் பிரேரணை வரிசைப்படுத்தப்படும் எனவும் அதன் பின் கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்ந்து முடிவெடுத்த பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இடைக்கால வரவு-செலவுக் கணக்கின் மீதான வாக்கெடுப்பில் தோல்வியுறும் பட்சத்தில் அரசைக் கலைப்பதற்கான பிரேரணை எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையைத் தவிர்த்து அதற்கு முன்பாக நாடாளுமன்றைக் கலைப்பதற்கான முயற்சிகளில் கூட்டு எதிர்க்கட்சியினர் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment