நாளை நாடாளுமன்றம் கூடும்: UNP நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Tuesday 13 November 2018

நாளை நாடாளுமன்றம் கூடும்: UNP நம்பிக்கை!


நாடாளுமன்ற கலைப்புக்கான உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் ஏலவே அறிவித்ததன் படி நாடாளுமன்றம் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


நிறைவேற்று அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஜனநாயக விரோத செயற்பாடு தடுக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.க முக்கியஸ்தர்கள் நாளை நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சபாநாயகர் முக்கிய அறிவிப்பொன்றை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment