நாளை நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமானால் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக பதவி நீக்கி, நாடாளுமன்றத்தையும் ஜனாதிபதி கலைத்திருந்த நிலையில், நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னைய அறிவிப்பிற்கிணங்க நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment