ரணில் தான் பிரதமர்: UNP நம்பிக்கை! - sonakar.com

Post Top Ad

Friday 16 November 2018

ரணில் தான் பிரதமர்: UNP நம்பிக்கை!


இன்றைய வாக்கெடுப்பில் தமது பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்து ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராவார் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.


நேற்று மாலை கட்சி உறுப்பினர்கள் சத்தியக் கடதாசியில் ஒப்பமிட்டிருந்த நிலையில் தமது தரப்பு தயாராக இருப்பதாகவும் இன்று மதியம் நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளும் ரணிலை தொடர்ந்தும் ஆதரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment