நாடாளுமன்றுக்கு உள்ளும் வெளியும் ஐக்கிய தேசியக் கட்சி மக்கள் சக்தியோடு பிணைந்திருப்பதாக தெரிவிக்கம் அக்கட்சியினர் இன்று ஜனநாயக விடுதலை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சர்வாதிகாரப் போக்கில் ஜனநாயகத்தை முடக்கிப் போட்டுள்ளதாக தெரிவித்து அதிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஐ.தே.க முக்கியஸ்த்தர்கள் உரையாற்றியிருந்தனர்.
நாடாளுமன்ற பெரும்பான்மையை ஐக்கிய தேசியக் கட்சி தக்க வைத்துள்ள நிலையில் இரண்டாவது நாளாகவும் இன்று சபை அமர்வுகள் குழப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment