பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னைய அரசு சூத்திரங்களை உருவாக்கி விலைகளை உயர்த்தி மக்களைத் துன்புறுத்தியதாக தெரிவிக்கும் இடைக்கால அரசு, இன்றைய தினம் விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.
எனினும், சர்வதேச சந்தையில் பெற்றோல் விலை 30 டொலரால் குறைந்துள்ளதனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென சம்பிக்க ரணவக்க விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment