மஹிந்த தரப்புக்கு முதுகெலும்பிருந்தால் நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு முகங்கொடுக்குமாறு சவால் விடுத்துள்ளார் சஜித் பிரேமதாச.
ஐக்கிய தேசியக் கட்சியினரால் கொழும்பில் நடாத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், கடந்த மூன்றரை வருடங்களில் எதுவுமே நடக்கவில்லையென்று பலர் கூறுகிறார்கள் ஆனாலும் இன்று சுயாதீன நீதித்துறையுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அறவழிப் போராட்டம் தொடரும் என சஜித் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment