நீண்ட காலமாக அவ்வப் போது பேசப்பட்டு வரும் தலைமைத்துவ மாற்ற விவகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மீண்டும் தலையெடுத்துள்ளது.
இந்நிலையில், சஜித் பிரேமதாசவை தலைவராக்கினால் மாத்திரமே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஹரின் பெர்னான்டோ உட்பட சில கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்திலும் நிதானமாக நடந்து கொண்ட சஜித் குறித்து மக்கள் அவதானம் திரும்பியுள்ள நிலையில் கட்சிக்குள்ளும் மீண்டும் இப்பேச்சு எழுந்துள்ளமையும் இப்பின்னணியில் சஜித் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment