பௌத்த உயர் பீடத்தின் தலையீட்டை நாடும் UNP! - sonakar.com

Post Top Ad

Sunday 4 November 2018

பௌத்த உயர் பீடத்தின் தலையீட்டை நாடும் UNP!



நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையை சீர் செய்து மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் அரசை தொடர்வதற்கு பௌத்த உயர் பீடத்தின் தலையீட்டை நாடி கண்டி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றர் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ்தர்கள்.



அஸ்கிரிய மைதானத்திற்கு உலங்கு வானூர்தியில் சென்றடைந்துள்ள கட்சி முக்கியஸ்தர்கள் அங்கு மகாநாயக்கர்களை சந்தித்து, அவர்கள் தலையீட்டை வேண்டி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

அரசர்கள் காலத்திலும், நாடு தவறான வழியில் செல்லும் சந்தர்ப்பங்களில் சங்க பீடம் தலையிட்டு அதனைத் திருத்தியுள்ளதாக சம்பிக்க ரணவக்க விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment