மைத்ரி பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும்: சம்பிக்க - sonakar.com

Post Top Ad

Sunday 4 November 2018

மைத்ரி பதவி விலகி தேர்தலை சந்திக்க வேண்டும்: சம்பிக்க


பிரதேச சபை உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியுள்ளார்கள். ஆனால், ஜனாதிபதியொருவர் பக்கம் தாவியது இதுவே முதற்தடவையெனவும் அதனைச் செய்தது மைத்ரிபால சிறிசேனவே என தெரிவிக்கிறார் சம்பிக்க ரணவக்க.


இந்நிலையில், மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையும் ஆதரவும் முடிவுக்கு வந்து விட்டதாகவும் மைத்ரி பதவி விலகி தேர்தலுக்கு முகங் கொடுத்து தன்னை நிரூபிக்க வேண்டும் வேண்டும் எனவும் சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் கண்டியில் கூடியுள்ள நிலையில் அங்கு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே சம்பிக்க இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment