நாட்டில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழ்நிலை தொடர்பில் ஜனாதிபதியுடன் தொலைபேசியூடாக உரையாடியுள்ள ஐ.நா செயலாளர் அன்டனியோ கட்டரஸ், நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை தீர்மானிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தேவைப்படின் அனைத்து கட்சிகளுக்குமிடையிலான கலந்துரையாடலை ஏற்படுத்த ஐ.நா அனுசரணை வழங்கத் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய பிரதமருடன் ஆட்சியதிகாங்கரங்களை பகிர்ந்து கொள்வதில் மைத்ரி முனைப்பாக இருக்கின்றமையும், தமக்கே நாடாளுமன்ற பெரும்பான்மை இருப்பதாக இரு தரப்பும் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment