நாட்டின் பிரதமர் யார்? எனும் விவகாரத்தில் நாடாளுமன்றம் முடிவெடுக்கத் தவறின், இரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்க முடியாது போய் விடும் என எச்சரித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
திடீரென பதவி நீக்கப்பட்ட போதிலும், தன்னைப் பதவி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென வாதிட்டு வரும் ரணில், தானே தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிப்பதாக தெரிவிக்கிறார்.
எனினும், மஹிந்த ராஜபக்ச தனது கடமைகளைப் பொறுப்பே அமைச்சரவையை நியமித்து இயங்க ஆரம்பித்துள்ள நிலையில், வாக்களிப்பு தவிர்க்கப்படின் இரு கட்சி ஆதரவாளர்களும் மோதி, இரத்த ஆறு ஓடுவதைத் தவிர்க்க இயலாது போய் விடும் என கரு ஜயசூரியவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment