மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இன்று தமது நாடாளுமன்றின் கௌரவத்தையும் முக்கியத்துவத்தையும் கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய தூதர் ஜேம்ஸ் டோரிஸ்.
நாடாளுமன்றமே இவ்வாறு நிலை குலைந்தால் மக்களுக்கான பணியைத் தொடர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ள அதேவேளை பல சர்வதேச ஊடகங்களும் தொடர்ந்தும் இலங்கை நாடாளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வுகளை ஒளிபரப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment