TNAயிடம் புதிய நிபந்தனை விதித்துள்ள மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Friday 30 November 2018

TNAயிடம் புதிய நிபந்தனை விதித்துள்ள மைத்ரி!


மஹிந்த ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையில்லாததால் ஜனாதிபதியிடம் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கக் கோரும் பிரேரணை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.



இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே மைத்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்தவிடம் நாடாளுமன்ற பலம் இல்லையென்பதை ஏற்றுக்கொள்கின்ற போதிலும் டிசம்பர் 5ம் திகதி புதிய பிரேரணையொன்று கொண்டு வரப்பட வேண்டும் என மைத்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment