மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதாக தெரிவிக்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
மஹிந்தவின் நியமனம் ஜனநாயக விரோதமான செயல் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மௌனம் இதனை ஊக்குவிப்பதாகி விடும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, அரசியல் சட்டத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பே தவறானது என மைத்ரி அண்மையில் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment